விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயில் சிலை உடைக்கப்பட்டதே கண்டித்து பொதுமக்கள் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம். குற்றவாளிகளை கைது செ

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயில் சிலை உடைக்கப்பட்டதே கண்டித்து பொதுமக்கள் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம். குற்றவாளிகளை கைது செ
X
*விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயில் சிலை உடைக்கப்பட்டதே கண்டித்து பொதுமக்கள் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம். குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை ....*
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயில் சிலை உடைக்கப்பட்டதே கண்டித்து பொதுமக்கள் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம். குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை .... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோயில். தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய நல்லதங்காள்,அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும் கோவிலாகவும் எழுப்பப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது.அந்தகோவிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். நெல் வயல்களுக்கு மத்தியில் கண்மாய் கரையை ஒட்டி தனியே அமைந்துள்ளதால் மாலை 3 மணிக்குள் கோவில் பூட்டப்பட்டு விடும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தகோவிலில் கடந்த ஜன 26 ந் தேதிகாலை பூசாரி தங்கமணி வழக்கம்போல் கோவிலை திறக்க வந்த போது முன் மண்டபத்தில் இருந்த கிரில் கம்பிகள் வளைக்கப்பட்டு இருந்ததை கண்டார்.உள்ளே சென்று பார்த்த போது கோவில் கருவறையின் கதவுகளும் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் மாரியப்பன், விருதுநகர் கைரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி ஆகியோர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்தனர்.மோப்பநாய் கோவிலில் இருந்து வயல் வரப்புகள் வழியாக அங்கிருந்த கண்மாய் கரை வரை சென்றது. இந்த நிலையில் வத்திராயிருப்பு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தற்போது வரை தேடி வருகின்றனர்.நல்லதங்காள் கோவிலில் சுவாமி சிலை உடைக்கப்பட்டு கடந்த 18 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை குற்றவாளிகளை போலீசார் தனிப்படை அமைத்தும்கண்டுபிடிக்காததை கண்டித்து அர்ச்சனாபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி கட்டியும் அப்பகுதியில் கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இந்த போராட்டத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் மற்றும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த நல்லதங்காள் கோவிலில் சிலைகளை உடைத்து உண்டியலை உடைத்தும் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் தற்போது வரை போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள நல்லதங்காள் பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் குற்றவாளிகளை உடனடியாக போலீசார் கைது செய்யவில்லை எனில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி கிருஷ்ணன் கோவிலில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
Next Story