குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

X
கள்ளக்குறிச்சி, மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்'எனும் திட்டத்தில், குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், குழந்தை திருமண விளைவுகள், தடுப்பு நடவடிக்கைகள், தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. சமூக நல அலுவலர் தீபிகா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

