வாணியம்பாடி அருகே கீரை கட்டுகளை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் சாலை கவிழந்து விபத்து

வாணியம்பாடி அருகே கீரை கட்டுகளை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் சாலை கவிழந்து விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கீரை கட்டுகளை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் சாலை கவிழந்து விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர் சாலையில் கொட்டி வீணான கீரைக்கட்டுகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெல்லக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், சரக்கு வாகனத்தில் கீரை கட்டுகளை ஏற்றுக்கொண்டு சென்னை நோக்கி சென்றக்கொண்டிருந்த போது, வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் சரக்கு வாகன ஓட்டுநர் சந்தோஷிற்கு சிறுகாயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை வாகனத்தில் இருந்து மீட்டனர்.. அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சரக்கு வாகனத்தில் இருந்த சாலையில் கொட்டிய கீரை கட்டுகளை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்தனர்.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..
Next Story