தண்ணீர் பாட்டிலால் வந்த தகராறு!

பொது பிரச்சனை
புதுக்கோட்டை பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க வந்தவரிடம் கூலிங் வாட்டரா சாதா வாட்டரா என்று ஒருமுறைக்கு இருமுறை கேட்டதில் ஏற்பட்ட பிரச்சனையில் கடையை சூறையாடி கடை உரிமையாளரை தாக்கிய நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பெட்டிக்கடையை சூறையாடும் காட்சியும் கடை உரிமையாளரை தாக்கும் காட்சியும் வெளியாகி உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன்விடுதி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வரக்கூடிய நிலையில் அவரது கடையில் தேவதாஸின் சித்தப்பா கலியபெருமாள் (78) இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த மூன்று பேர் தண்ணீர் பாட்டில் கேட்டதில் பிரச்சனை ஏற்பட்டு தேவதாசை தாக்கி கடையில் இருந்த கலியபெருமாளை ஆபாசமாக பேசியதோடு கடையில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்பொழுது பெட்டிக்கடையில் மூன்று பேர் சூறையாடி கடை உரிமையாளரை தாக்கிய போது பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story