பங்கு சந்தை முதலீடு பண மோசடி இருவர் கைது : ஆவடி குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி ரூ.3.50 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 2 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி ரூ.3.50 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 2 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். சென்னை அடுத்த மாங்காடு, அடிசன் நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). இவர் பொறியாளர். இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜெயராமன், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என இணையதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து அதில் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.1.56 கோடி வரை பணத்தை அனுப்பிள்ளார். இதன் பிறகு பல மாதங்கள் ஆகியும், அவருக்கு இரட்டிப்பு பணம் வராததால், ஏமாற்றப்பட்டதை அறிந்து ஜெயராமன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஜெயராமன் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி இணையவழிக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து மோசடி நபர்களை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பாண்டிச்சேரி, சத்யா நகர், மேற்கு குறுக்கு தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (41), சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (29) ஆகிய இருவரை ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் இருவரும் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் சுமார் ரூ.3.5 கோடி வரை பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இவர்களிடமிருந்து 2 மடிக்கணினி, 3 கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீஸார் பிரகாஷ், அஜித்குமார் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை (பிப்.17) கைது செய்து, காஞ்சிபுரம் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Next Story