கண்டாச்சிபுரம் அருகே சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு

கண்டாச்சிபுரம் அருகே சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு
X
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், நடுத்தெருவைச் சோ்ந்தவா் காசிநாதன் மகன் மதிவாணன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியைச் சோ்ந்த தாண்டவராயன் மகன் மோகனுடன் (20) பைக்கில் சென்றாா்.திருவண்ணாமலை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மழவந்தாங்கல் ஏரிக்கரை பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, விழுப்புரம் நோக்கிச் சென்ற காா், பைக் மீது மோதியது.இதில், பலத்த காயமடைந்த மதிவாணன் உயிரிழந்தாா். தா.மோகன் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story