படப்பையில் மேம்பால பணியால் நெரிசல் கனரக வாகனத்திற்கு தடை விதிக்கப்படுமா?

படப்பையில் மேம்பால பணியால் நெரிசல் கனரக வாகனத்திற்கு தடை விதிக்கப்படுமா?
X
படப்பையில் காலை மற்றும் மாலை வேலைகளில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இந்த சாலையில், படப்பை பஜாரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022 ஜனவரியில் துவங்கி, ஆமை வேகத்தில் நடக்கிறது. பாலம் கட்டுமான பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சாலை குறுகலாகி உள்ளது. இந்நிலையில், வாலாஜாபாதில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு, தினமும் ஏராளமான லாரிகள் படப்பையை கடந்து வண்டலுார், தாம்பரம் அதன் சுற்றுப்புறங்களுக்கு செல்கின்றன. இதனால், வழக்கத்தைவிட இரு மடங்கு போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
Next Story