சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு

சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு
X
2 நாள் புத்தாக்க பயிற்சி
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மூலம் இந்தாண்டு 2024- 2025-ம் ஆண்டுக்கான, சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி, வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு, வட்டார இயக்க மேலாளர் அறிவுநிதி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இதில், மகளிர் திட்டத்தின் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு, பொறுப்புகள், கடமைகள், நிர்வாக அமைப்பு முறை, திட்டத்தின் கோட்பாடுகள், குழுவின் வகைகள், பஞ்சசூத்திரா, விடுப்பட்ட இலக்கு, மக்கள் குழுவில் இணைத்தல், பயிற்சி அளித்தல், தர ஆய்வு, தர மதிப்பீடு, வங்கி இணைப்பு, காப்பீடு செய்தல், சுயஉதவிக் குழுக்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைத்தல், இணையதளத்தில் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கு அரசு திட்டங்கள் பெற்று தருதல், இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு அளித்தல், பதிவேடுகள் பராமரித்தல், உரிமைச் சார்ந்த திட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள், சமூக மேம்பாடு போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில், 35 ஊராட்சியில் உள்ள சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் கலந்து கொண்டார்.
Next Story