லாரி- மோட்டார் கை்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார்.

X
சேலம் பெருமாம்பட்டி அருகே தும்பா தூளிபட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் சத்தியமூர்த்தி (வயது36). இவர், தனியார் கல்லூரி ஒன்றில் விலங்கியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். சிவதாபுரம் ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரியும், சத்தியமூர்த்தியின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே சத்தியமூர்த்தி பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான சத்தியமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சத்தியமூர்த்திக்கு குறிஞ்சிமலர் என்ற மனைவியும், 2 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். விபத்தில் கல்லூரி பேராசிரியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story

