வட்ட சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்

வட்ட சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்
X
உடுமலை வட்ட சட்டப்பணி குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பு, போக்சோ சட்டம், அடிப்படைச் சட்டங்கள், போதைப்பொருள் தடுப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு உடுமலை கூடுதல் மாவட்ட நீதிபதி சி.ராஜலிங்கம் தலைமை தாங்கினார். முகாமில் நீதிபதிகள் பேசும்போது "படிப்பை தவிர வேறு விதமான பயன்பாட்டிற்கு செல்போனை பயன்படுத்த கூடாது. நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் அறிந்து தவறான நோக்கத்தில் பழகும் நபரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 18 வயது பூர்த்தி அடையாமலும், ஓட்டுநர் உரிமம் பெறாமலும் வாகனங்களை இயக்க கூடாது. ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சட்ட சேவைகள் பெறுவதற்கு 15100 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றனர். முகாமில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் மற் றும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன், நீதித்துறை நடுவர் டி.நித்யகலா, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் கே.விஜயகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.பூஜா கண்மணி, பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story