சூரமங்கலம் அருகே கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கணவர் கூறியதால்

X
சேலம் புதுரோட்டை அடுத்துள்ள காமநாயக்கன்பட்டி மூலக்கரடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி (வயது 32). இவருடைய கணவர் சம்பத். திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு 3 வயதில் மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய கணவர் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர்களது வீட்டின் அருகே உள்ள முருகன் கோவிலில் அன்னதானம் நடந்துள்ளது. இதற்காக தனது கணவரை அழைத்துள்ளார். ஆனால் அவர் செல்ல மறுப்பு தெரிவித்ததுடன் கலைவாணியையும் கோவிலுக்கு செல்ல கூடாது என்று கூறியுள்ளார். இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே மனம் உடைந்த கலைவாணி வீட்டின் பூஜை அறையில் கணவரின் வேட்டியில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கலைவாணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கணவர் கூறியதால் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story

