சுசீந்திரம் : கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

X
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஆண்டார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் பச்சைமால் (63). கூலி தொழிலாளி. இவருக்கு இடது கை ஊனம் ஆகும். இவர் தினமும் அதிகாலையில் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கீழே விழுந்து கிடக்கும் தேங்காய்களை எடுக்க செல்வது வழக்கம். அதுபோல் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் இருந்து தேங்காய் எடுக்க செல்வதாக கூறி சென்றவர் பின்னர் திரும்பவில்லை. விசாரித்த போது கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து, இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் பச்சைமால் உடலை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

