கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

X
குமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (40). இவர் கொத்தனார். இவரது தங்கை பியூலா என்பவருக்கும் அதே பகுதியை சார்ந்த கொத்தனார் பாபு தாஸ் (57) என்பவருக்கும் சொத்து தகராறு உள்ளது. இந்த நிலையில் நேற்று பியூலா வீட்டு காம்பவுண்ட் சுவர் கட்டுமான பணி நடைபெற்றது. அப்போது அவரது அண்ணன் கண்ணதாசனும் அந்த பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த பாபு தாஸ் மற்றும் அவரது மனைவி ராணி (54) ஆகியோர் சேர்ந்து கண்ணதாசனை பார்த்து கெட்ட வார்த்தை பேசி உள்ளனர். மேலும் இருவரும் கண்ணதாசனை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்களாம். இதில் காயமடைந்த கண்ணதாசன் குழுத்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து கண்ணதாசன் அளித்த புகாரின் பேரில் பாபு தாஸ், ராணி மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

