போக்சோ வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

X
சேலம் மாநகர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் பதிவான போக்சா வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த வினித் என்பவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சேலம் போக்சோ கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதன் பேரில் சூரமங்கலம் எஸ்ஐ மேனகா தலைமையிலான போலீசார் தலைமறைவான வினித்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு சென்ற போலீசார் வினீத்தை கைது செய்தனர். பின்னர் சேலம் அழைத்து வந்து போக்கோ கோர்ட்டில் வினீத்தை ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

