சேலம் அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் பூசாரி பலி

X
சேலம் திருவாக்கவுண்டனூைரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் கண்ணன் (வயது 25). இவர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் ஹரீசன். இவருடைய உறவினர் திண்டிவனத்தில் உள்ளனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கண்ணன, ஹரீசன் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டனர். கார் காரிப்பட்டி அருகே சென்ற போது சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதியது. இதில் கார் 2 முறை பல்டி அடித்தபடி சென்று கவிழ்ந்தது. இடிபாட்டில் சிக்கி கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் பட்ட 5 பேரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

