சேலம் குகை பகுதியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

சேலம் குகை பகுதியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
X
போலீசார் விசாரணை
சேலம் குகை ஆண்டிப்பட்டி ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் அவரது மகன் கார்த்திக் மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தொடர்ந்து மது குடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மனைவி நிவேதா வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது கார்த்திக் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிவேதா தான் உறவினர்கள் உதவியுடன் கணவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து உறவினர்கள் கார்த்திக்கின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story