நெசவாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தவெக பொதுச்செயலாளர்
பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் ஆயிரம் பேர் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் தமிழக வெற்றிக்கழகம் உறுதுணையாக இருக்கும் தொலைபேசியில் ஆதரவு தெரிவித்த பொதுச்செயலாளர் ஆனந்த். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் அறிஞர் அண்ணா நெசவாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் மாவட்டம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர் நெசவாளர்களின் போராட்ட களத்திற்கு நேரில் சென்று உண்ணாவிரத களத்தில் ஆதரவு தெரிவித்தனர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் டில்லி அப்போது போராட்டம் மேற்கொண்டு வரும் நெசவாளர்களுக்கு நிதி உதவி வழங்கினார்கள் மேலும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் நெசவாளர்களின் இந்தப் போராட்ட களத்தின் தலைவர் கலாம் விஜயன் அவரிடம் தொலைபேசி தொடர்பு கொண்டு நெசவாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார் உங்கள் போராட்டம் களத்தில் தமிழக வெற்றி கழகம் உறுதுணையாக இருக்கும் தலைவர் விஜய் இது குறித்து உங்களுக்கு நெசவாளர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடுவார், உங்கள் போராட்டம் உங்கள் கோரிக்கைகள் வெற்றி அடையும், என்று தெரிவித்தார்....
Next Story





