வேலூர் பேரூர் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளருக்கு வாழ்த்து.

வேலூர் பேரூர் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளருக்கு வாழ்த்து.
X
வேலூர் பேரூர் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர்,பிப். 22: திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்த மதுரா செந்தில் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அந்த பொறுப்பை முன்னாள் மாவட்ட செயலாளர் கே.எஸ் மூர்த்தி வகிப்பார் என பொதுச் செயலாளர் துறைமுகம் அறிவித்திருந்தார். மீண்டும் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற கே எஸ் மூர்த்திக்கு கட்சியின் சார்பில் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் பேரூர் கழகம் சார்பில் நகர செயலாளர் முருகன் தலைமையில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், மாவட்ட ஓட்டுநர் அணி உதயகுமார், மகிழ் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று மாவட்டச் செயலாளர் கே எஸ் மூர்த்திக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story