திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்
X
திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் தகவல்
சேலம் ரெயில்வே கோட்டத்தின் கரூர் பிரிவில் உள்ள ரெயில்வே பாலத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் இயங்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது. அதன்படி திருச்சியில் இருந்து ஈரோடு வரை செல்லும் திருச்சி -ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56809) திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயங்கும். இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story