கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

X
திருக்கோவிலுார், கலை அறிவியல் கல்லுாரியில், ஆங்கிலத்துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாணவி ராஜகுமாரி வரவேற்றார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், தாளாளர் பழனிராஜ், கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்தி பேசினர். ஆங்கிலத் துறை தலைவர் ராமராஜன் அறிமுக உரையாற்றினார். விழுப்புரம் அரசு கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியர் சின்னதுரை சிறப்புரையாற்றினார். மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
Next Story

