தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி
X
தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்..
அரியலூர், பிப்.23 - ஜெயங்கொண்டம் அருகே தத்தனூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 7 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தனித்தனி மேஜைகள் அமைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தகுதி பெறுவார்கள். தகுதி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் டி-ஷர்ட் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
Next Story