ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீர்நிர்லை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்..*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீர்நிர்லை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி காயல்குடி ஆற்றில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து சைக்கிள் நிறுத்துமிடம், கடை, சுகாதார வளாகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளதாக வருவாய் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. வருவாய்த் துறையினர் வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்தபோது வன்னியம்பட்டி இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான காளீஸ்வரி மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தனி நபர்கள் காயல்குடி ஆற்றின் மீது சைக்கிள் ஸ்டாண்ட், கடை, கழிப்பறை, இறுதி சடங்கு செய்யும் இடம் என கட்டிடங்களை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளது உறுதியானது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இரு முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றுவதற்காக வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் JGP இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்த போது, அளவு டேப்பை பறித்தும், மின் இணைப்பை துண்டிக்க விடாமல் மின்கம்பத்தை சுற்றி நின்றும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.3 நாட்கள் அவகாசம் வழங்கி விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர்.
Next Story

