முதல்வர் மருந்தகம் திறப்பு விழா. மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு..

முதல்வர் மருந்தகம் திறப்பு விழா. மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு..
X
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் கீழ ஓகை பகுதியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நிகழ்வை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும்; “1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தினை” திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கீழஓகை பகுதியில், இசட்.ஏ.101.ஓகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் பார்வையிட்டனர்.
Next Story