வலை கம்பெனியில் வட மாநில தொழிலாளி சாவு

X
அசாம் மாநிலம் லேமுனாக் நஸ்ரே புரம் என்ற பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப் அலி (47). இவர் குடும்பத்துடன் நாகர்கோவில் அடுத்த நைனாபுதூர் பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் அவரது மகன் நஸ்ருதின் (27) என்பவரும் வேலை பார்க்கிறார். நேற்று வேலை பார்க்கும் இடத்தில் திடீரென மயங்கி விழுந்தார் அவரை ஆட்டோவில் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அஷ்ரப் அலி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நெஞ்சு வலி ஏற்பட்டிருந்ததால் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை வந்தவுடன் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

