பெரம்பலூர் நகர தி.மு.க.பொது உறுப்பினர்கள் கூட்டம்
பெரம்பலூர் நகர தி.மு.க.பொது உறுப்பினர்கள் கூட்டம்! நகர கழகச் செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் நகர தி.மு.க.பொது உறுப்பினர்கள் கூட்டம், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், நகர கழகச் செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மார்ச் -01, அன்று கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் நகர கழகம் முழுவதும் கழகக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், நகர் மன்ற துணைத் தலைவர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், தொ.மு.ச.பேரவை மாவட்ட கவுன்சில் பேரவை செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story




