அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் திருடிய நபரை கைது

15000 மதிப்புள்ள மணல் மற்றும் டிராக்டர் பறிமுதல்
அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் திருடிய நபரை கைது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று 26.02.2025 டிராக்டரில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி அகரம்சீகூர் புறக்காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் அகரம் சீகூர் பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது திட்டக்குடி to மருதையான் கோவில் ரோட்டில் கை பெரம்பலூர் பிரிவு ரோடு அருகே டிராக்டரில் மணல் திருடிக்கொண்டு வந்த இரண்டு நபர்களில் ஒருவரை பிடித்து விசாரித்தபோது .சுரேஷ் 42/25 த/பெ கணேசன், மெயின் ரோடு, கோவிந்தராஜபட்டினம், குன்னம் தாலுகா, பெரம்பலூர் மாவட்டம். A2.தவமுருகன் 46/25 த/பெ ராமசாமி, மெயின் ரோடு, கை பெரம்பலூர், குன்னம் தாலுகா, பெரம்பலூர் மாவட்டம்.ஆகியோர்கள் என்பது தெரியவர மேற்படி இரண்டு நபர்களில் A2.தவமுருகன் அங்கு இருந்து தப்பித்து ஒடிவிட்டார். A1.சுரேஷ் என்பவரை கைது செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியிடமிருந்து
ரூபாய் 15000/- மதிப்புள்ள 1.1/2 யுனிட் மணல் மற்றும் டிராக்டரும்,
பறிமுதல் செய்த குன்னம் காவல்நிலைய காவல்துறையினர் மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Next Story