சொக்கநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பெரியதும்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சியம்பாள் சமேத சொக்கநாத சுவாமி கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜை விடிய விடிய நடைபெற்றது. சிவராத்திரியை முன்னிட்டு, திசைகளை வெளிச்சப்படுத்துவோம் என்ற தலைப்பில் கவியரங்கம், புலவர் தி.வேதரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பாவலர்கள் க.ரவிச்சந்திரன், சுதா அருணகிரி, ரெ.சுரேஷ், கு.மகிழன், பா.பாலமுத்துமணி ஆகியோர் கவி பாடினர். பக்தி மார்க்கத்தில், மிஞ்சி நிற்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில்,முனைவர் தி.வேதரெத்தினம் தொடக்க உரை நிகழ்த்தினார். நடுவராக மஞ்சுளாவும், ஆண்களா என்ற தலைப்பில் செங்குட்டுவன், குவளை க.ரவிச்சந்திரன்,ரெ.சுரேஷ், பெண்களா என்ற தலைப்பில் கவிஞர் சே.ரூபா, கவிஞர் சுதா அருணகிரி, பா.பாலமுத்துமணி ஆகியோர் பேசினர். பெரியத்தும்பூர் இளைஞர்கள் நடத்தும் இளையநிலா வின்ஸ்டார் நடன குழு இணைந்து வழங்கிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story



