சிவராத்திரியில் பக்தர்களுக்கு உதவிய தவெக தொண்டரணி

X
நெல்லையில் உள்ள சிவன் கோவிலில் சிவராத்திரி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டரணி சார்பில் வி.எம். சத்திரம் சிவன் கோவில், பாளையங்கோட்டை வடபகுதி அய்யா கோவில், நெல்லையப்பர் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு இரவு உணவு வழங்கி சிறப்பித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

