சேலத்தில் லாரியில் பேட்டரி திருடியவர் கைது

X
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 37), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு அதில் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, லாரியில் இருந்த 2 பேட்டரிகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், லாரியில் பேட்டரிகளை திருடியது கே.பி.கரடு பகுதியை சேர்ந்த வினோத்குமார் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து லாரியில் திருடப்பட்ட பேட்டரிகளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

