மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது
X
மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது 100 ஆண்டுகளுக்கு மேலாக நள்ளிரவு நடைபெற்று வரும் இந்நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவில் உள்ளது பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையினால் கரண்டிகள் இல்லாமல் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சிவராத்தியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற பாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விடுவார்கள் கடந்த காலங்களில் வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற பாட்டிகள் அப்பம் சுட்டனர் தற்போது முத்தம்மாள் கடந்த 35 வருடங்களாக அப்பம் சுட்டு வருகிறார்.இது தொன்று தொட்டு வரும் பழக்கம்.இதற்காக கடந்த 40 நாட்கள் விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடதக்கது. இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவர் முன்னதாக பாசிப்பயிறு தட்டாம் பயிறு கருப்பட்டி ஆகியவைகளை உறலில் வைத்து இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டையை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பார்கள். மஹா சிவராத்தரி அன்று நடைபெறும் பத்திரகாளியம்மன் கோவில் பூஜையில் பக்தர்கள் விரதம் இருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வீட்டின் செல்வங்கள் செழிக்கும் என்பது ஐதீகம் இன்று வரைக்கும் நடை முறையில் உள்ள இப்பகுதிமக்களின் நம்பிக்கையாகும். மூதாட்டி கொதிக்கும் நெயில் கையை விட்டு அப்பம் சுடும் நிகழ்சியை காண்பதற்கு ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
Next Story