மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற முதல் கால பூஜை

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற முதல் கால பூஜை
X
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற முதல் கால பூஜை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற முதல் கால பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முதல் கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமா தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சிவகாமி அம்பாள் உடனுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவில். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் வந்து தரிசனம் செய்பவர்களுக்கு உடலில் உள்ள பிணிகளை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி குணமாக்கி தருவார் என்று ஐதீக நம்பிக்கையோடு ஏராளமான பக்தர்கள் இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் வந்து தரிசனம் செய்து செல்வர். இந்நிலையில் மகாசிவராத்திரி தினமான இன்று சுவாமி, அம்பாளுக்கு முதல் கால பூஜையானது நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய குடத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். தொடர்ந்து மூலவர் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி மற்றும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிரகாரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தி களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து உற்சவ மூர்த்திகள் மூன்று முறை திருக்கோவிலின் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று நடைபெற்ற முதல் கால பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வெளியே வரை மிக நீண்ட தூர வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் பிரகாரத்தில் ஆருத்ரா நாட்டிய குழு சார்பில் நாட்டையாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் பங்கேற்ற குழந்தைகள் சிவன் மற்றும் பார்வதி வேடம் அணிந்து திருவிளையாடல் புராணங்களை நடனம் ஆடி தங்களின் நாட்டியாஞ்சலியை செலுத்தினர். இந்நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா சிவராத்திரி தினமான இன்று நடைபெறும் நான்கு கால பூஜைகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை உபயோதாரர்களின் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
Next Story