ராணிப்பேட்டையில் மகளிர் சுய உதவிக் குழு கண்காட்சி அறிவிப்பு!

ராணிப்பேட்டையில் மகளிர் சுய உதவிக் குழு கண்காட்சி அறிவிப்பு!
X
மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி விற்பனை கண்காட்சி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கைத்தறி சேலைகள், தானிய உணவுகள், ஊறுகாய்கள், வீட்டு உபயோகப் பொருட் கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி பயன்பாட்டு பொருட்களை மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காட்சிப்படுத்தி, அதனை விருப்ப கண்காட்சி மூலம் பொது மக்களுக்கு சரியான விலையில் விற்பனை செய்வதற்குரிய நடவடிக்கைகளானது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பின்புறம் உள்ள சந்தை வளாகத்தில் புத்தக கண் காட்சி நடைபெறும் இடத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 9-ந்தேதி வரை 10 நாட்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விரும்பும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களது உற்பத்தி பொருட்கள் பற்றிய விவரங்களை மாவட்ட மகளிர் திட்டம், 2-வது தளம் 'எப்' பிளாக்கில் பதிவு செய்து கொள்ளலாம்.பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சரியான விலையில் பெற்று பயன் பெறலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story