அரக்கோணத்தில் கிராவல் மண் கடத்த முயன்ற வாலிபர்கள் கைது

அரக்கோணத்தில் கிராவல் மண் கடத்த முயன்ற வாலிபர்கள் கைது
X
கிராவல் மண் கடத்த முயன்ற வாலிபர்கள் கைது
அரக்கோணத்தை அடுத்த ஆனைபாக்கம், மிட்டபைாளயம் உள்ளிட்ட பகுதிகளில் அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட் டனர். அப்போது மிட்டபாளையம் பகுதியில் உள்ள குளத்தில் கிராவல் மண் எடுத்துக் கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் முள்வாய் பகுதியை சேர்ந்த சாய்ஈஸ்வரன் (வயது 20) மற்றும் நாகேந்திரபாபு (33) என்பதும், இவர்கள் அரசு அனுமதியின்றி மண் எடுப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story