புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை

X
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சுந்தனேந்தல் கிராமத்திலிருந்து பரமக்குடிக்கு புதிய அரசு நகரப் பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் தமிழரசி பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் மதியரசன், காரைக்குடி மண்டல தொ.மு.ச. பொதுச் செயலா் பச்சைமால், அரசு போக்குவரத்துக்கழக மண்டல துணை மேலாளா் (தொழில்நுட்பப் பிரிவு) தமிழ்மாறன், வட்டாட்சியா் முருகன், காவல் துறை ஆய்வாளா் மணிகண்டன், பரமக்குடி கிளை மேலாளா் ரத்தினவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story

