*வாணியம்பாடி பாலாற்றில் வெகுவிமர்சையாக நடைப்பெற்ற மயானகொள்ளை நிகழ்ச்சி*..

வாணியம்பாடி பாலாற்றில் வெகுவிமர்சையாக நடைப்பெற்ற மயானகொள்ளை நிகழ்ச்சி*..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் வெகுவிமர்சையாக நடைப்பெற்ற மயானகொள்ளை நிகழ்ச்சி.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பாலாற்றில் கரையோரம் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் இன்று மாசி மாத அமாவாசையையொட்டி, இன்று மயானக்கொள்ளை நிகழ்ச்சி இன்று வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. முன்னதாக அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலை மற்றும் பூங்கரம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, பாலாற்றில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரசுரன் கண் முட்டை எடுக்கும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைப்பெற்றது, அப்பொழுது அசுரனின் கண்முட்டையை எடுக்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர், இந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.. அதனை தொடர்ந்து இந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் வணவேடிக்கைகள் நடைப்பெற்றது, அதனை பக்தர்கள் கண்டு ரசித்தனர்..
Next Story