கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுக்க கூடாது கொடுத்தால் தீக்குளிப்பேன் அதிமுக நிர்வாகி
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவிற்கே சீட் வழங்க வேண்டும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதியை வழங்கக்கூடாது அப்படி வழங்கினால் பேருந்து நிலையம் முன்பாக தீக்குளிப்பேன் என பொதுக் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக நிர்வாகி
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவிற்கே சீட் வழங்க வேண்டும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதியை வழங்கக்கூடாது அப்படி வழங்கினால் பேருந்து நிலையம் முன்பாக தீக்குளிப்பேன் என பொதுக் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக நிர்வாகி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே கலைந்து சென்ற பொதுமக்கள் இருக்கைகள் காலியாகி காட்சியளித்தது ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியின் போது ஒலிபெருக்கி ஸ்பீக்கரில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அதிமுக வடக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் பெரியபாளையம் அதிமுக கிளைச் செயலாளர் சீனிவாசன் பேசுகையில் கும்முடிபூண்டி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு 2026 கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க கூடாது அதிமுகவிற்கு மட்டுமே சீட்டு வழங்க வேண்டும் என்றும் அப்படி வழங்காவிட்டால் முதல் ஆளாக பேருந்து நிலையம் முன்பாக தீக்குளிப்பேன் என சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமை கழக பேச்சாளர் வண்ணை கணபதி உள்ளிட்ட அனைவரின் முன்னிலையிலும் அவர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி பொதுகூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். முன்னதாக ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியின் போது அங்கிருந்த ஒலிபெருக்கி ஸ்பீக்கரில் திடீரென புகை வந்ததால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் நடைபெற்ற போது கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் பலர் சென்றதால் அங்கு போடப்பட்டிருந்த பல இருக்கைகள் காலி இருக்கைகள் மட்டுமே காட்சியளித்தது
Next Story





