காட்டுப்பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது

கம்பம் வடக்கு போலீசாருக்கு கம்பம் காட்டு பள்ளிவாசல் அருகே பள்ளி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக இருவர் கஞ்சா விற்பனை செய்வதாக நேற்று (பிப்.27) தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அங்கு பைக்குகளில் வைத்துக் கஞ்சா விற்பனை செய்த மன்சூர் அலிகான், ஹரிஹரன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த கஞ்சா, கஞ்சா விற்ற பணம் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
Next Story

