சேலம் சீலநாயக்கன்பட்டியில் தொழிலாளி தற்கொலை

X
சேலம் சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 38), கூலித் தொழிலாளி. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி கிரிஜா (30) அவரை கண்டித்துள்ளார். சம்பவத்தன்று அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதில் மன உளைச்சல் அடைந்த தமிழரசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

