பூதப்பாண்டி அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

பூதப்பாண்டி அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
X
போலீஸ் விசாரணை
குமரி மாவட்டம் பூதப்பாண்டி  அருகே  அருமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (68). கூலித் தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் ராமச்சந்திரன் சமீப காலமாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த கூறப்படுகிறது.      இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்தவர் நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு கொண்டார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.       அங்கு டாக்டர்கள் இராமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டார் என  கூறினார்கள்.  இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story