கந்தம்பாளையம் அருகே கூரை வீடு தீ பற்றியதில் முதியவர் பலி.

கந்தம்பாளையம் அருகே கூரை வீடு தீ பற்றியதில் முதியவர் பலி.
X
கந்தம்பாளையம் அருகே கூரை வீடு தீ பற்றியதில் முதியவர் பலி போலீசா விசாரணை.
பரமத்தி வேலூர், பிப். 28: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள ஆவரங்காட்டுபுதூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ரங்கன் (80). இவர் முதிர்ச்சியின் காரணமாக உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இவர் படுத்துக்கொள்வதற்காக தனியாக தென்னங்கீற்றில் குடிசை அமைத்து அதில் படுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை அவரது மனைவி வீராயி சமையல் செய்வதற்காக விறகு அடுப்பில் தீப்பற்ற வைத்துள்ளார். எதிர்பாராத விதமாக ரங்கன் படுத்திருந்த குடிசை வீட்டில் தீ பற்றியதில் குடிசை முழுவதும் வேகமாக பற்றி எரியத் தொடங்கியது. குடிசை வீட்டில் உடல் நலம் குன்றி திறந்த ரங்கன் எழுந்திருக்க முடியாததால் தீ அவர் மேலும் பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ரங்கனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இருந்தார். தகவல் தெரிந்து மருத்துவமனைக்குச் சென்ற போலீசார் ரங்கனின் உடலை மீட்டு சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story