வாசுதேவநல்லூா் அருகே பள்ளி மாணவி தற்கொலை

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் புதுக்காலனி தெருவைச் சோ்ந்த கா்ணன் மகள் மதுநிஷா(16). புளியங்குடியிலுள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

