நாகர்கோவிலில் குளத்தில் சடலமாக கிடந்த ஆட்டோ டிரைவர்

X
நாகர்கோவில் பள்ளிவிளை ரயில்வே ரோடு பகுதி சேர்ந்தவர் பாபு (47). ஆட்டோ டிரைவர். இவர் இன்று 2-ம் தேதி காலை நாகர்கோவில் சுப்பையார் குளத்தில் சடலமாக கிடந்தார். இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் வடசேரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாபு உடலை அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குவது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாபு எப்படி இறந்தார், என்று தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உறுதியாக கூற முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story

