கடலூர்: பல்வேறு இடங்களில் அதிகாலை பரவலாக மழை

கடலூர்: பல்வேறு இடங்களில் அதிகாலை பரவலாக மழை
X
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலை பரவலாக மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story