அரசுப்பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் கண்டு கொள்ளாத அதிகாரிகள்

இருசக்கர வாகனத்தில் பயணம் செல்லும் பள்ளி மாணவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கினால் மீண்டும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளாமல் இருப்பார்கள் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களிலும் இருசக்கர வாகனங்களில் நகரப் பகுதிகளில் அதிக சத்தத்துடன் உலா வருவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் இருசக்கர வாகனத்தில் உலாவரும் மாணவர்கள் தலைக்கவசம் அணியாமலும் வாகனங்களில் இருக்கும் ஒலிபெருக்கியை அளித்துக்கொண்டு வருவதால் சாலையில் செல்லும் அனைவருமே அச்சத்துடன் செல்கின்றனர் இதுபோன்ற பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே அவர்கள் மறுமுறை அந்த தவறை செய்யாமல் இருப்பார்கள் என பொதுமக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள்
Next Story