திருவானைக்காவலில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

திருவானைக்காவலில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
X
திருச்சி திருவானைக்காவலில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
திருச்சி திருவானைக்காவல் ரயில்வே பாலம் அருகே ஒருவா் இறந்துகிடப்பதாக திருச்சி ரயில்வே இருப்புப்பாதை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சென்று பாா்த்தபோது, சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் இரு கால்கள் துண்டான நிலையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா். அவரது கையில் ஆா்விபி என பச்சை குத்தியிருந்தது. இதையடுத்து அவரது சடலத்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story