நெமிலி அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!

X
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த கரிக்கன்தாங்கல் கிராமம் அருகே செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர் பஞ்சராகி நின்றது. அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென டிராக்டரின் பின்பக்கத்தில் மோதியதாக தெரிகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலவை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் அமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், விபத்தில் இறந்தவர் அகரம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த பாபுசாய்பு மகன் கௌஸ்பாஷா (வயது 42) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

