நெமிலி அருகே மணல் திருடிய டிராக்டர் பறிமுதல்

X
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் வெங்கடாபுரம் பகுதியில் உள்ள ஓடையிலிருந்து மணல் திருடுவதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அப்பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மணல் திருடி கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு ஜ.சிபி, ஒரு டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு கொண்டுவந்து, வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
Next Story

