கந்தம்பாளையம் அருகே விஷம் அருந்தி முதியவர் தற்கொலை.

X
Paramathi Velur King 24x7 |2 March 2025 7:42 PM ISTகந்தம்பாளையம் அருகே விஷம் அருந்தி முதியவர் தற்கொலை போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர்,பிப்.2: கந்தம்பாளையம் அருகே உள்ள கோலாரம் தாளக்கரையைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 85), விவசாயி. இவர் தோட்டத்தில் தனியாக வசித்து வந்தார். ராமசாமி உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
