தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம்

தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம்
X
தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் அர்ஜுன் சம்பத் பங்கேற்பு
தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். மாநில அளவிலான நிர்வாகிகள், மாவட்டதலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 2026 தேர்தலுக்குள் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து கட்சியை வலிமைப்படுத்த நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. வக்பு வாரிய சொத்து என தாராபுரம், அலங்கியம் திருப்பரங்குன்றம் உள்பட பல பகுதிகளில் இந்துக்களின் விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். வக்பு வாரிய மசோதவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே நாளில் ஒன்பது பாலியல்வன் கொடுமைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்துகளின் வாக்குவங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும். தேசிய ஜனநாயக முன்னணியில் அ.தி.மு.க., சீமான், பா.ஜ.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு ஒரு அணியில் நின்று தி.மு.க. அணியினரை தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அர்ஜூன் சம்பத்திற்கு மணி விழா நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
Next Story