வானூர் அருகே நகை பணம் திருட்டு

வானூர் அருகே நகை பணம் திருட்டு
X
போலிசார் வழக்கு பதிந்து விசாரணை
வானுார் அடுத்த இரும்பை மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி கோவிந்தம்மாள், 54; இவர், தனது பீரோவில் 4 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மற்றும் 11 சரவன் நகைகள் வைத்திருந்தார்.கடந்த மாதம் 27ம் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது, பணம் மற்றும் நகை இருந்துள்ளது. ஆனால், நேற்று பீரோவை திறந்து பார்த்தபோது, நகை மற்றும் பணத்தை காணவில்லை. வீட்டில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து மர்ம நபர் நகைளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின்பேரில், ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story